ஜெகந்நாத பெருமாள் திருக்கோயிலில் வளர்பிறை அஷ்டமி விழா வழிபாடு

கும்பகோணம் அடுத்துள்ள  நாதன் கோவில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும்  அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள்  திருக்கோயிலில், புரட்டாசி  மாத வளர்பிறை அஷ்டமி  தினமான
ஜெகந்நாத பெருமாள் திருக்கோயிலில் வளர்பிறை அஷ்டமி விழா வழிபாடு

கும்பகோணம் அடுத்துள்ள நாதன் கோவில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில், புரட்டாசி  மாத வளர்பிறை அஷ்டமி  தினமான  17-10-2018 அன்று திருக்கோயில் வளாகத்தில் காலை 11மணி முதல் மதியம் 2 மணிவரை சிறப்பு பூஜையாக ஸ்ரீசுக்த ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து,  தாயாருக்கு  சிறப்பு திருமஞ்சனமும், பின்னர்  அலங்காரமும், தூப-தீபாராதனைகளும் நடைபெற்றது.

இவ்விழாவில், அருள்மிகு செண்பகவல்ல்லி தாயார் [உற்சவர்] ஸ்ரீசரஸ்வதி அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் கண்டு வழிபாடுகள் செய்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com