குபேர ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

ஷீரடியில் சாய்பாபா சமாதி அடைந்ததன் 100ஆவது ஆண்டு விழாவையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள ஷீரடி குபேர சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
குபேர ஷீரடி  சாய்பாபா கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம்
குபேர ஷீரடி  சாய்பாபா கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம்


ஷீரடியில் சாய்பாபா சமாதி அடைந்ததன் 100ஆவது ஆண்டு விழாவையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள ஷீரடி குபேர சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதிக்கு அருகில் உள்ள இக்கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பஜனைகள், குரான் படித்தல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளும், மகாதீபாராதனையும் நடைபெற்றன. பின்னர், கோயில் பிரகாரத்தை பல்லக்கு வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்த பூஜையில் திரளான பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சாயிபாபாவை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com