அவிநாசியில் வினோத திருவிழா: உடலில் சேறு பூசி ஆண் பக்தர்கள் வழிபாடு

அவிநாசி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடாக உடல் முழுவதும் சேறு
அவிநாசியில் வினோத திருவிழா: உடலில் சேறு பூசி ஆண் பக்தர்கள் வழிபாடு

அவிநாசி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடாக உடல் முழுவதும் சேறு பூசி அம்மனை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். 

அவிநாசியை அடுத்துள்ள அத்தனூர் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 13-ம் தேதி பூச்சாட்டுடன் திருக்கல்யாண உற்சவ விழா தொடங்கியுது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு முளைப்பாலிகை, மாவிளக்கு ஆகியன எடுத்தும், பொங்கல் வைத்தும் பெண்கள் வழிபாடு செய்தனர். 

உலக நலன் வேண்டியும், மழை வளம் பெருகவும் ஆண் பக்தர்கள் ஒருவருக்கொருவர் உடலில் சேறு பூசிக்கொண்டு அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீட்டுடன் பொங்கல் விழா நிறைவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com