புதுச்சேரி ஜெயின் கோயிலில் இந்திர துவஜ் பூஜை நிறைவு! 

உலக அமைதிக்காக புதுச்சேரி ஜெயின் கோயிலில் நடைபெற்ற இந்திர துவஜ் பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது. 
புதுச்சேரி ஜெயின் கோயிலில் இந்திர துவஜ் பூஜை நிறைவு! 

உலக அமைதிக்காக புதுச்சேரி ஜெயின் கோயிலில் நடைபெற்ற இந்திர துவஜ் பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது. 

புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள ஜெயின் கோயிலில் கடந்த 14-ம் தேதி இந்திர துவஜ் பூஜை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோயிலுக்கு 108 விசுத் சாகர்ஜி முனிவரின் சீடர்களான 108 ஆர்ஜித் சாகர்ஜி, 108 கோம்ய சாகர்ஜி ஆகியோர் நடைப்பயணம் மேற்கொண்டனர். இவர்களின் முன்னிலையில் கடந்த 8 நாட்களாக உலக மக்கள் நலம், உலக அமைதி வேண்டி இந்திர துவஜ் எனும் பூஜை நடைபெற்றது. 

பூஜையின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயின் கோயி0லல் சிறப்பு ஹோமம் நடந்தது. ஜெயினர்கள் ஊர்வலமாகச் சென்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com