உலக அமைதிக்காக புதுச்சேரி ஜெயின் கோயிலில் நடைபெற்ற இந்திர துவஜ் பூஜை நேற்றுடன் நிறைவடைந்தது.
புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள ஜெயின் கோயிலில் கடந்த 14-ம் தேதி இந்திர துவஜ் பூஜை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோயிலுக்கு 108 விசுத் சாகர்ஜி முனிவரின் சீடர்களான 108 ஆர்ஜித் சாகர்ஜி, 108 கோம்ய சாகர்ஜி ஆகியோர் நடைப்பயணம் மேற்கொண்டனர். இவர்களின் முன்னிலையில் கடந்த 8 நாட்களாக உலக மக்கள் நலம், உலக அமைதி வேண்டி இந்திர துவஜ் எனும் பூஜை நடைபெற்றது.
பூஜையின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயின் கோயி0லல் சிறப்பு ஹோமம் நடந்தது. ஜெயினர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.