இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகப் பெருமான். விநாயகருக்கு ஒரு தந்தம் இருப்பதால் ஒற்றைக் கொம்பன் 'ஏகதந்தர்' என்றெல்லாம் சொல்வர்.
தத்துவரீதியாக இதற்கு ஒரு காரணம் உண்டு. ஆண் யானைக்கு தந்தம் இருக்கும். பெண் யானைக்கு தந்தம் கிடையாது.
கடவுள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவர் என்பதை உணர்த்தவே, விநாயகர் ஒருபுறம் ஆண் தன்மையுடன் கொம்புடனும், மறுபுறம் பெண் தன்மையுடன் கொம்பை இழந்தும் காட்சி தருகிறார் என்கிறார் காஞ்சிப் பெரியவர்.