பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் நன்கொடை

பத்மாவதித் தாயாருக்கு இந்து தர்மார்த்த சமிதி சார்பில் 2 திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் நன்கொடை

பத்மாவதித் தாயாருக்கு இந்து தர்மார்த்த சமிதி சார்பில் 2 திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
 சென்னையைச் சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி ஆண்டுதோறும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 11 திருக்குடைகளை வழங்கி வருகிறது. அவற்றில் 2 திருக்குடைகள் பத்மாவதித் தாயாருக்கு அளிக்கப்படுகின்றன. திருமலையில் கடந்த 13ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது. அதன் 5ஆம் நாள் இரவு கருட சேவை நடைபெறும். அப்போது பயன்படுத்துவதற்காக இந்து தர்மார்த்த சமிதி ஆண்டுதோறும் புதிய திருக்குடைகளை தேவஸ்தானத்திற்கு அளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி சென்னையிலிருந்து 11 திருக்குடைகள் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஊர்வலமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டன. வழியில் பல்வேறு இடங்களில் தங்கிய அந்தக் குடைகள் சனிக்கிழமை மாலை திருச்சானூரை அடைந்தன. அவற்றில் 2 குடைகளை இந்து தர்மார்த்த சமிதியின் தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி, பத்மாவதித் தாயார் கோயில் அதிகாரிகளிடம் வழங்கினார். மற்ற 9 திருக்குடைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை திருமலையை அடைய உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com