திருமலையில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் மலையப்ப சாமி திருவீதி உலா வந்தார்.
திருமலையில் கடந்த 13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 4-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் கல்ப விருட்ச வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். அப்போது நாரை போல் உருவெடுத்து வந்த அரக்கனின் வாயைப் பிளந்த ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத்தில் தன் நாச்சியார்களுடன் அவர் காட்சி அளித்தார்.
நேற்றிரவு சர்வபூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் வாகனத்தில் எழுந்தருளினார். மாடவீதியில் கூடியிருந்த பக்தர்கள் பக்தியுடன் கற்பூர ஆரத்தி அளித்து அவரை வணங்கினர்.
பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் மலையப்ப சாமி மாட வீதியில் வலம் வந்தார். இதையடுத்து, இன்றிரவு கருட வாகன சேவை நடைபெற