புரட்டாசி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது? 

12 ராசிக்களுக்குமான புரட்டாசி மாத பலன்களை பற்றி தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்..
புரட்டாசி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது? 

12 ராசிக்களுக்குமான புரட்டாசி மாத பலன்களை பற்றி தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன்பெறுவோம். 

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி  ரண, ருண,ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் களத்திரஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு களத்திரஸ்தானத்தில் இருந்த குருபகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி களத்திரஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். எதிர்ப்புகள் அகலும். 

குடும்பத்தில் உடல்நிலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். அவ்வப்போது வண்டி, வாகனங்கள் பழுது ஏற்பட்டு டென்ஷனை உண்டு பண்ணும். ஆறில் புதன் ஆட்சியாக இருப்பதால் கலைகளில் ஆர்வம் உண்டாகும். தாய்மாமன் ஆதரவு உங்களுக்கு கிடைக்கப் பெறுவீர்கள். கடன்கள் ஏதேனும் இருப்பின் அதற்கு இப்போது பதில் சொல்ல வேண்டி வரும்.

தொழிலைப் பொறுத்தவரையில் உங்களது பத்தாமிடமான செவ்வாய் கேது பகவான் சேர்க்கை உங்களுக்கு சில குழப்பங்களை தரலாம். ஆனால் தெய்வ அனுகூலத்தால் அது உங்களை பாதிக்காத அளவிற்கு முடிவெடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் சிற்சில பிரச்சினைகள்  இருந்தாலும் அது பெரிய அளவில் தலை தூக்காது. உங்களிடத்தை ஒருவராலும் நிரப்ப இயலாது என்பதை உங்கள் மேலதிகாரிகள் புரிந்து கொள்வார்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.

அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம். 

பெண்களுக்கு வார்த்தையை புரோயகிப்பதில் கவனமாக இருக்கவும். மற்றவர் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டி வரலாம்,
மாணவர்கள் படிப்பில் அதிக சுமையை சுமக்க வேண்டி வரலாம். சிலர் கல்விச்சுற்றுலா சென்று வருவீர்கள்.

அஸ்வினி:
இந்த மாதம் வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். 

பரணி:
இந்த மாதம் உத்யோகஸ்தர்கள் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். 

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். 

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 12, 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 6, 7
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
பரிகாரம்: சிவப்பு அரளியைக் கொண்டு துர்கைஅம்மனை வழிபடவும்.

{pagination-pagination}
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு ரண, ருண, ரோக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி ரண, ருண, ரோக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்: 
எதிர்காலமுன்னேற்றத்தை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ரிஷபராசி அன்பர்களே! இந்த மாதம் தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். 

குடும்பத்தில் விருத்தி ஏற்படும். உடல்நிலையில் அதிக முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற மனக்கசப்புகள் வந்து போகும். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்திருந்து அவர் ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தை பார்க்கிறார். அதனால் உங்களுக்கு தைரியம் உண்டாகும். இளைட சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.  

தொழிலில் ஸ்தானாதிபதி சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் சில தொந்தரவுகள் தொழிலில் வந்தாலும் உங்கள் ராசியாதிபதி சுக்கிரனின் நட்பு கிரகம் ஆகையால் பெரிதாக பாதிப்பு ஏதும் வராது.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமுடன் செயல்படுவீர்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்ற கவலை மனதில் உண்டாகும், மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நீங்களும் பொறுப்பாவீர்கள்.

அரசியல்துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

பெண்கள் மற்றவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. நல்லவர்களாக பழகி உங்களை ஏமாற்றுவதற்கு நிறைய பேர் காத்திருப்பார்கள். 

மாணவர்கள் சாதிப்பதற்கு அதிகமாக முயற்சி செய்ய வேண்டும். சிலரின் கோரிக்கைகள் சுலபமாக நிறைவேறும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும். 

ரோகிணி:
இந்த மாதம் பிள்ளைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே  இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம்  தொடர்பான  செலவுகள் ஏற்படலாம். 

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 8, 9
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி 
பரிகாரம்: தினமும் அம்பாளை துதித்து குங்கும அர்ச்சனை செய்யுங்கள்.

{pagination-pagination}

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் சுக  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி சுக ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண, ருண, ரோக  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
கஷ்டமில்லாத சுக வாழ்க்கை வாழ விருப்பமுடைய மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். 

குடும்பத்தில் ஒருவிதமான அச்ச உணர்வு இருந்து கொண்டிருக்கும். உடன்பிறந்தவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டு அகலும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வார்த்தைகளை கவனமாக பிரயோகியுங்கள். கடன்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சிலர் உங்களை நோகடித்தாலும் நீங்கள் அதை கண்டுகொள்ள மாட்டீர்கள்.

தொழிலைப் பொறுத்தவரை அனைத்து தொழிலும் உள்ளவர்கள் நன்மையை பெறுவார்கள். ஐந்தாம் பார்வையாக குருபகவான் உங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் நன்மைகள் தொழிலில் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கண்காணிப்புக்கு ஆளாவீர்கள். எனவே சரியான நேரத்தில் உங்களது பணிகளை நிறைவேற்றி வையுங்கள்.

அரசியல்வாதிகள் உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். தெய்வீகப் பணிகளில் நேரடியாகவும் பின்புலமாகவும் இருந்து செயல்படுவார்கள். 

கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். தங்களுக்குத் தேவையான ஆடம்பர விஷயங்கள்  போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது.

பெண்களுக்கு பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை தீரும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் வந்து சேரும்.
மாணவர்கள் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு படிப்பிற்காக வாங்கவேண்டிய உபகரணங்களை வாங்குவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். 
திருவாதிரை:

இந்த மாதம் மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். 

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும்.  

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 20, 21; அக்டோபர் 17
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 10, 11
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
பரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமாளை தரிசித்து வாருங்கள்.

{pagination-pagination}

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதிதைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் சுகஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு சுக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி சுக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் கடகராசி அன்பர்களே!. இந்த மாதம் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலக்கூடிய காலகட்டம். பணவரத்து கூடும். கடன் பிரச்சனை தீரும்.

குடும்பாதிபதி தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப முடிவுகளை நீங்களே துணிந்து எடுப்பீர்கள். இளைய சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதியே பார்ப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சுலபமாக சாதிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள்  உங்கள் ராசிக்கு குருபார்வை கிடைப்பதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு கட்டாயமாக கிடைக்கப் பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் வளர்ச்சியின் மீது பொறாமைப்படுபவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

பெண்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். சகல ஐஸ்வர்யங்களும் குருபார்வையால் கிடைக்கபெறுவீர்கள். நன்மைகள் அதிகம் நடக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கிடைக்க வேண்டிய சலுகைகள் குறித்த நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் புத்திரர் நன்கு படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு.  

பூசம்:
இந்த மாதம் உடல் ஆரோக்கியத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்தோங்கும். 

ஆயில்யம்:
இந்த மாதம் கணிசமாக அளவில் கையிருப்பு உயரும். வெளியூர் பயணத்தை லாபநோக்கில் நடத்தி வெற்றி காண்பீர்கள். திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். 

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 22, 23,24
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 12, 13, 14
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்:  உடல் ஊனமுற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.

{pagination-pagination}

சிம்மம்: (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசியில்  இருந்த சூரிய பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் தைரிய, வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தைரிய, வீர்ய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
எண்ணிய காரியங்களை  திறமையாக செய்து முடிக்க கூடிய சிம்ம ராசி அன்பர்களே! எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். 

குடும்பஸ்தானத்தில் ராசிநாதன் சஞ்சாரம் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பாதிபதி புதன் பகவான் குரு, சுக்ரனுடன் இணைந்து இருப்பதால் பெண்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

தொழில் ஸ்தானாதிபதி ஆட்சியாக இருப்பதுடன் புதன் மற்றும் குருவுடன்  இணைந்து உங்களுக்கு சுப பலன்களையே தருகிறார். நிறைய புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் இருக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு கணவனுடன் இருந்த மனகசப்புகள் தீர்ந்து சுமூகமாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றல் உண்டாகும்.

மாணவச் செல்வங்களுக்கு ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும். மகிழ்ச்சியான சூழ்நிலையில் மனம் லயிக்கும்.

மகம்:
இந்த மாதம் உங்களது மேலான யோசனைகளை உங்கள் உயரதிகாரிகள் ஏற்பார்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறும். எனினும் வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். 

பூரம்:
இந்த மாதம் தைரியம் பிரகாசிக்கும். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. 

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய்
பரிகாரம்: பிரதோஷம் நடைபெறும் நாட்களில் நந்தியெம்பெருமானை வழிபடுங்கள்.

{pagination-pagination}
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு அயன, சயன ,விரய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி ராசியில் இருந்த புதன் பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தைரிய, வீர்ய  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய ஆசைப்படும் கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம்  நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும்.

குடும்ப சூழ்நிலையில் நல்ல முன்னேற்றம் அதிகரிக்கும். உங்களுடைய வாக்கு வன்மை அதிகரிக்கும். உங்களுடைய தனாதிபதி ஆட்சி பலம் பெற்றிருப்பதால் உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். புதிதாக வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். வராது என்று எண்ணிக் கொண்டிருந்த நீண்ட நாளைய கடன் வந்து சேரும். கடன்கள் அடைக்கப் பெறுவீர்கள்.

தொழில் ஸ்தானாதிபதி புத பகவான் உங்களுடைய வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்கள் தொழிலை விரிவு படுத்துவதற்கான நிதிஉதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிட்டும்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரை சம்பள உயர்வு சன்மானம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை விசயமாக பயணங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். 

பெண்கள் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் வருகை மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும்.

மாணவக் கண்மணிகள் மனதில் தேவையில்லாத பயமும், கவலையும் தோன்றி மறையும். அனைவரும் உங்கள் மேல நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. 

அஸ்தம்:
இந்த மாதம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். 

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் எதிர்கால தேவை கருதி சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர். 

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 27, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 20, 21; அக்டோபர் 17
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி 
பரிகாரம்: ஸ்ரீ மஹாலட்சுமியை வழிபட்டு குங்குமத்தால்  அர்ச்சனை செய்யுங்கள்.

{pagination-pagination}

துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான்  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி அயன,சயன, போக ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு ராசியில்   இருந்த குருபகவான் தனம், , குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி ராசியில்  இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய துடிக்கும் துலாராசி அன்பர்களே! இந்த மாதம்  வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். 

ராசியாதிபதி சுக்ரன் ராசியிலேயே குருவுடன் சஞ்சாரம் செய்வதால் தடைபட்டிருந்த திருமணங்கள் நல்ல படியாக முடியும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பார்கள். உடலில் இருந்த பிரச்சனைகள் குணமாகும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல்நிலையிலும் முன்னேற்றம் இருக்கும்.

தொழில் ஸ்தானத்தில் ராஹூ பகவான் சஞ்சரிப்பதால் கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபம் உண்டாகும். எனினும் கவனமுடன் செயல்பட வேண்டும். புதிய ஆர்டர்களை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பண வரவு சீராக இருக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு வர வேண்டிய பணம் சிறிது காலதாமதத்திற்குப் பிறகே வந்து சேரும். மேலதிகாரிகள் உங்களை வேலை வாங்குவது போல் இருந்தாலும் அவர்களின் கடமையைச் செய்வதால் நீங்களும் எதையும் எதிர்பார்க்காமல் உங்களுக்கு கொடுக்கப்படும் வேலையைச் செய்யுங்கள்.

அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். 

கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.

பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மனதில் மகிழ்ச்சி பிறக்கும். குடும்பத்துடன் நாட்களை கழிப்பீர்கள்.
மாணவர்களுக்கு படிப்பிற்காக கிடைக்க வேண்டிய உதவித் தொகைகள் கிடைக்கும். வெளியூர் சென்று சிலர் செய்முறைக் கல்வியினை கற்று வருவீர்கள்.

சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்வி வளர்ச்சி காண்பர். சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் உருவாகும். 

சுவாதி:
இந்த மாதம் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். படிப்பு முடித்துவிட்டு, வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். 

விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
இந்த மாதம் அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்களுக்கு இதுநாள்வரை செய்து வந்த சமூகப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு தாமாக வந்து சேரும். 

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 30; அக்டோபர் 1
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 22, 23,24
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
பரிகாரம்: நவகிரக சுக்கிர பகவானுக்கு மல்லிகை மலர் வாங்கிக் கொடுப்பது நல்லது.

{pagination-pagination}

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் லாப  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி லாப ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் அயன, சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு அயன, சயன, போக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி அயன, சயன,போக ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனிக்கும் விருச்சிகராசி அன்பர்களே! இந்த மாதம் பணிகளில் கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் நன்மை கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். 

குடும்பஸ்தானத்தில் பகை கிரகமான சனி பகவான் இருந்தாலும், மாதத்தின் பிறபகுதியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு வருவதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு நடக்கும், இது நாள் வரையில் திருமணத்திற்கு இருந்த தடைகள் நீங்கி திருமணம் நடக்கும். மனகசப்புகள் நீங்கி நிம்மதி பிறக்கும். 

தொழில் ஸ்தானாதிபதி சூர்ய பகவான் இந்த மாதம் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதாலும், நாடிப்படி செவ்வாய் மற்றும் கேது சம்பந்தம் பெறுவதாலும் லாபம் அதிகரிக்கும். வாய் சாமர்த்தியத்தால் சிலர் லாபம் பெறுவர். 

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் உழைப்பிற்காக பாராட்டப்படுவீர்கள். வேலைப்பளு ஓரளவு குறைந்து மன நிம்மதி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். 

பெண்களுக்கு வாழ்வின் முக்கிய காலகட்டமாக இருக்கும். கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விருதுகல் கிடைக்கும்.
மாணவர்களுக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் முக்கிய கட்டத்தை நீங்கள் கடப்பீர்கள். எனவே கவனமுடன் இருப்பது நல்லது.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் அரசியல் பணிக்கு புத்திரர்களாலான உதவிகளைச் செய்வர். எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும் . வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். 

அனுஷம்:
இந்த மாதம் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பணிகளை கவனிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. 

கேட்டை:
இந்த மாதம் ஒரு முறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு  எடுப்பதற்கு முன் யோசிப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். 

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 2, 3
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 25, 26
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன் 
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மல்லிகை மலர் வாங்கித் தர திருமணத்தடை நீங்கும்.

{pagination-pagination}

தனுசு: (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி தொழில் ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு லாப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் அயன,சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி லாப ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
தங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கப் பெறும் தனுசு ராசி அன்பர்களே! விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபடுவீர்கள்.  

குடும்பாதிபதி சனி பகவான் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் கணவன் - மனைவிக்கிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் மற்றும் கேது பகவான் சேர்க்கை உங்கள் மீது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சொல்ல வழி கோலும். கவனம் தேவை.நீங்கள் எது செய்வதாக இருந்தாலும் குடும்பத்தினருடன் தெரிவிப்பது நல்லது.

தொழில் ஸ்தானாதிபதியும் லாப ஸ்தானதிபதியும் இணைந்து லாப ஸ்தானத்தில் இருப்பதால் வர வேண்டிய பணம் தாமதம் இல்லாமல் வந்து சேரும். தந்தை செய்யும் தொழிலை செய்பவர்களுக்கு யோகமான காலகட்டம். இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சிலர் புதிய யுக்திகளை அனுபவமிகுந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை கூற வேண்டாம். வாக்குவாதத்திற்கு இடம் தர வேண்டாம். மூத்தோர் சொல் கேட்டு நடப்பது வெற்றியை உண்டாக்கும். பிறமதத்தினர் உறுதுணையாக இருந்து நம்பிக்கை அளிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

பெண்களுக்கு கிடைக்க வேண்டிய பூர்வீக சொத்துகள் கிடைக்கும். சிலருக்கு வழக்கில் சாதகமான போக்கு காணப்படும். 

மாணவர்களுக்கு வாழ்வில் முக்கியமான காலகட்டமாக அமையும். சில நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம். 

மூலம்:
இந்த மாதம் எதையும்  எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக  காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும் 

பூராடம்:
இந்த மாதம் வீண்  ஆசைகள் மனதில் தோன்றும். உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.  எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் வீண் விவகாரங்களில்  தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு  செய்வதன் மூலம் சாதகமான பலன்  கிடைக்கும். 

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர்  27, 28, 29
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், 
பரிகாரம்: முருகனுக்கு அரளி பூ மாலை சாற்றி வழிபட குடும்ப பிரச்சனைகள் அகலும்.

{pagination-pagination}

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தொழில் ஸ்தானத்தில் இருந்த குருபகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்தும் மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் எதிர்பார்த்த  பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுகஸ்தானாதிபதி ராசியில் சஞ்சாரம் செய்வதால் வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். தாய் வழி உறவினர்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். அவர்களுடன் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

தொழில் ஸ்தானத்தில் குரு, புதன், சுக்ரன் என அனுகூலமான கிரகங்களின் கூட்டமைப்பு இருப்பதால் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்களின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாகவும் இருப்பார்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

உத்யோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். உங்களுடன் பணிபுரியும் பெண்களால் உங்களுக்கு சில ஆதாயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அரசயில்வாதிகள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும். எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். 

கலைத்துறையினர்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தவர்கள், சிறுசிறு துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறமுடியும். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள். 

பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் அகலும். தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மாணவர்களின் கற்கும் திறன் மேம்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். தொழிற்கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல்  ஆரோக்கியமும் அடையும். கணவன்,  மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. 

திருவோணம்:
இந்த மாதம் மனதில் பக்தி உண்டாகும்.  சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம்  பேசும்போதும் கவனம் தேவை.  எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் நன்மையும் சிரமமும் கலந்த பலன் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள். 

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 30; அக்டோபர் 1
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்கி வர தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

{pagination-pagination}

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் அஷ்டம  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல ஆசைப்படும் கும்பராசி அன்பர்களே! இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை  துணையின்  மூலம் ஆதாயம் உண்டாகும். 

குடும்ப ஸ்தானத்தை சூரிய பகவான் பார்ப்பதால் குடும்பத்தில் உங்களின் நிலை மேம்படும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உங்களின் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்காக உங்களிடம் கலந்து ஆலோசிப்பார்கள். குடும்பஸ்தானாதிபதி குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான ஏற்பாடுகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழில் ஸ்தானத்திற்கு மாதத்தின் பிற்பகுதியில் குரு பகவான் வருவதால் புதிதாக தொழில் தொடங்குபவர்களும் லாபம் காண்பர். புதிய இடம் வாங்குபவர்களுக்கும் லாபமானதாக இருக்கும். வெளியூர் வாய்ப்புகளும் கிடைக்கும்.

உத்யோகஸ்தர்களுக்கு நல்ல யோகமான மாதம். புதிய வேலைகளை கற்றுக்கொள்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மன உலைச்சலால்  ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படலாம். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். 

கலைத்துறையினர் முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். 

பெண்கள் வேலை செய்யும் இடத்தில் நடக்கும் பிரச்சனைகளில்தேவையில்லாமல் தலையிட வேண்டாம்.அது உங்கள் மரியாதையைக் காப்பாற்றும்.

மாணவர்கள் ஆசிரியர்களிடம் நீங்களே சந்தேகங்களைக் கேட்டு தெளிவடையுங்கள். தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகிப்பது தவிர்ப்பது நலம்.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புத்திரர் வேண்டாத நட்பும், பிடிவாத குணமும் கொண்டு செயல்படுவர். கவனம் தேவை.

சதயம்:
இந்த மாதம் ஆன்மிகம் நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். 

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிக்கட்டுவீர்கள். தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். 

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 2, 3
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு மல்லிகை மலர் வாங்கிக் கொடுக்க மனக்குழப்பம் நீங்கும்.

{pagination-pagination}
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரக நிலைகள்:
செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு ரண, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி களத்திர ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.

பலன்:
எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக செயல்படும் மீன ராசி அன்பர்களே! பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். 

குடும்பாதிபதி செவ்வாய் பகவான் கேதுவுடன் இணைந்து தனது ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. தாயார் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் நல்ல சுமூகமான உறவு ஏற்படும். உங்களின் வார்த்தைக்கு குடும்பத்தில் மரியாதை இருக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

தொழில் செய்பவர்களுக்கு லாப ஸ்தானத்தில் இருக்கும் கேது பகவானால் தாயார் அல்லது தாய் வழி உறவினர்களால் நல்ல செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மேம்படும். புதிய வாடிக்கையாளர்கள் உங்கள் வாக்கு திறமைக்கு கிடைப்பார்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து சில கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இதனால் வேலை நேரம் அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள். 

கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள். 

பெண்கள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுய கௌரவம் காக்கப்படும்.

மாணவர்கள் தேவையில்லாத கலந்துரையாடல்களை தவிர்த்தல் நல்லது. உங்களுடன் இருப்பவர்களே உங்களை காட்டிக் கொடுக்க நேரிடும்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் அலைச்சல் செலவு ஏற்படலாம். பயணங்களின் போது  எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். 

உத்திரட்டாதி:
இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம்  வாக்கு வாதத்தை  தவிர்த்து அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணியை  கவனிக்க வேண்டி இருக்கும். 

ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் அமைதி ஏற்பட குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவதும் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் உண்டாகலாம். 

சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 4, 5
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
பரிகாரம்: சிவன் ஆலயங்களுக்குச் சென்று வர மனதில் தெளிவு பிறக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com