கும்பகோணம் சிவன் கோயில்களில் விமரிசையாக நடைபெற்ற நடராஜ திருமஞ்சனம்

கும்பகோணம் பகுதி திருக்கோயில்களில் அருளும் நடராஜ பெருமானுக்கு..
கும்பகோணம் சிவன் கோயில்களில் விமரிசையாக நடைபெற்ற நடராஜ திருமஞ்சனம்

கும்பகோணம் பகுதி திருக்கோயில்களில் அருளும் நடராஜ பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் நகரமாம் கும்பகோணத்தில் அமையப்பெற்றுள்ள, அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர் ஆகிய திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் சிவகாமி  அம்பாள் சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு வருடத்தில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களில் ஒன்றாகிய புரட்டாசி - சுக்ல பட்ச - சதுர்த்தசியை முன்னிட்டு, அர்த்த ஜாம கால அபிஷேகம் எனும்  திருமஞ்சனம் 23-9-2018, ஞாயிற்றுக்கிழமை மிகச்  சிறப்பாக  நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

- குடந்தை ப.சரவணன் 9443171383

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com