முகப்பேர் ஏரித்திட்டம் பிரதானச் சாலை மற்றும் 3, 5 ஆகிய பிரதானச் சாலைகளில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தப் பகுதி மக்களின் நலன் கருதி எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.அன்பரசன், சூளைமேடு..