ஜெ.ஜெ. நகர் மேற்கு பேருந்து நிலையத்தில் இருந்து அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதி வழித்தடத்தில் இயங்கி வந்த 41சி, எம் 27சி போன்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வெவ்வேறு பேருந்துகளில் செல்ல வேண்டியுள்ளது.
பெண்கள், முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பயணிகளின் நலன் கருதி இந்தப் பகுதிகளுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ருக்மணி நாராயணன், நொளம்பூர்.