அண்ணா நகர் கிழக்கு முதல் அவென்யு வ.உ.சி. நகர் 2-ஆவது தெருவில் சாலையோரங்களில் ஆட்டோக்கள், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்தப் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.ப.பத்மநாபன், அண்ணா நகர் கிழக்கு.