திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை சரியாக பராமரிக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பேருந்து நிலைய வளாகத்திலேயே சிறுநீர் கழிக்கின்றனர். மழைக்காலங்களில் நிலைமை மோசமாகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே, கழிப்பறையை பராமரிக்க நடவடிக்கை தேவை.
- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.