பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்து அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் தியாகராய நகர் சென்று, அங்கிருந்து வேறு பேருந்தில் கூட்ட நெரிசலில் பயணிக்கும் நிலையுள்ளது. இதனால், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் முதியோர், பெண்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகவே, நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.
- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.