தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை, அனகாபுத்தூர், குன்றத்தூர், குமணன்சாவடி, கரையான்சாவடி, கோவர்த்தனகிரி வழியாக ஆவடி செல்லும் 266 வழித்தட பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. இதனால், இந்த பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஆகவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.எஸ்.கணபதி சுப்பிரமணியன், தாம்பரம்.