அண்ணா நகர் கிழக்கு வ.உ.சி. நகர் பிரதான சாலையில் விநாயகர் கோயில் அருகே மக்களின் பார்வைக்கு தெரியாதவாறு தபால் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. தபால் பெட்டியை இடம் மாற்றி வைக்கக் கோரி கடந்த 14.11.2016 அன்று தினமணி நாளிதழில் ஆராய்ச்சிமணி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்தப் தபால் பெட்டியை மக்கள் பயன்படுத்தும் வகையில் இடம் மாற்றி வைத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினமணிக்கும் இந்தப் பகுதி மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மு.ப.பத்மநாபன், அண்ணா நகர் கிழக்கு.