புழல் ஏரி நிரம்பி தண்ணீர் திறந்துவிடும் போது, வெள்ள பாதிப்பால் சாமியார்மடம், தண்டல் கழனி, வடகரை, கிராண்டுலைன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும்.
தண்ணீர் வெளியேறும் கால்வாய் குப்பை, புதர்களால் சூழ்ந்துள்ளது. இதனால், தண்ணீர் தடையின்றி செல்வதில் சிக்கல் உள்ளது. சாலைகள் குறுக்கிடும் இடங்களில் உள்ள பாலங்களில் அடைப்புகள் உள்ளன.
எனவே, ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் கால்வாய்களை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை வேண்டும்.
நா.ஜெகதீசன், வடகரை.