பெசன்ட் நகர், அடையாறு, சாஸ்திரி நகர் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின் இணைப்புப் பெட்டிகளின் மேல் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால், மின் வாரிய ஊழியர்கள் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் போது மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும், மின் விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தச் செயல்களில் ஈடுபடுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.