அண்ணா நகர் வட்டம் 102-இல் உள்ள குஜ்ஜி நாயக்கன் தெருவில் சீனிவாச பெருமாள் கோயில் எதிரே உள்ள ரேஷன் கடையில் முறையாக பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதில்லை. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்களை முறையாக வழங்குவதில்லை. பெண்கள், முதியவர்களை ஒருமையில் பேசுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செ.பழனி, அண்ணா நகர்.