அனகாபுதூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியிலிருந்து அடையாறு, கோயம்பேடுக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லை. இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நேரடி பேருந்து சேவை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.ஆறுமுகம், அனகாபுதூர்.