எழும்பூர் பாந்தியன் சாலை கோ-ஆப்டெக்ஸ் பேருந்து நிறுத்தம் சிக்னல் அருகே வழித்தட பெயர் பலகை இல்லை. இதேபோல, எத்திராஜ்-பாந்தியன் சாலை சந்திப்பிலும் வழித்தட பெயர் பலகை இல்லை. இதனால், சென்னைக்கு புதிதாக வரும் மக்களுக்கு வழித்தடம் தொடர்பான விவரங்கள் தெரியாததால் சிரமம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழித்தடம் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி. விஜயகுமார், எழும்பூர்.