சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 9, 10 ஆகிய நடைமேடைகளில் கட்டணக் கழிப்பிட கட்டுமானப் பணிகள் ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. தினமும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். எனவே, இந்தப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.விஜயகுமார், எழும்பூர்.