வில்விவாக்கம் பேருந்து நிலையத்துக்கு நூற்றுக்கும் அதிகமான பேருந்துகள் வந்துசெல்கின்றன. இந்தப் பேருந்துகள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திரும்பும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீண்ட வரிசையில் பேருந்துகள் நின்று செல்வதால் அந்தப் பகுதியில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பள்ளி வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செல்ல முடிவதில்லை. இந்தப் பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹம்ஷவர்த்தன், வில்லிவாக்கம்.