நொளம்பூரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் ரேஷன் கடை இல்லை. இங்குள்ள அம்மா உணவகம் அருகே தாற்காலிக ரேஷன் கடை அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தன. ஆனால் இந்தப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. ரேஷன் பொருள்கள் வாங்க முகப்பேர் செல்ல வேண்டியுள்ளது. தொலை தூரம் செல்வதால் பெண்களும் முதியவர்களும் அவதியடைகின்றனர். இந்தப் பகுதி ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ருக்மணி நாராயணன், நொளம்பூர்.