விளக்குகள் ஒளிருமா?

ஐ.சி.எஃப் -நாதமுனி இடையே நியூ ஆவடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை.

ஐ.சி.எஃப் -நாதமுனி இடையே நியூ ஆவடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. இதேபோன்று, விஸ்வேஸ்வரய்யா பூங்காவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சாலை விளக்குகளும் ஒளிரவில்லை. இதனால், இப்பகுதியில் திருடர்கள் பெண்களின் நகைகளை களவாடுவதும், அவர்களை கேலி கிண்டல் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. பொதுமக்களின் இன்னல் நீங்கும் பொருட்டு, தெருவிளக்குகளை ஒளிரச் செய்ய, சென்னை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com