அண்ணாநகர், சாந்தி காலனியில் 100-ஆவது வட்டம் 8-ஆவது பிரதான சாலையில் உள்ள தெரு மின் கம்பங்களில் சில விளக்குகள் எரிவதில்லை. இதுதொடர்பாக 100-ஆவது வட்ட மின்வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டியில் செல்வோர் மேடு, பள்ளம் தெரியாமல் நிலை தடுமாறி விழுந்து காயங்களோடு செல்கின்றனர். சாலையில் நடந்து செல்லும் பெண்களின் நகைகள் திருடப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிகக் எடுத்து விளக்குகளை எரியச் செய்யவேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்