குரோம்பேட்டை பகுதி அண்மைக் காலமாக அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக, ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு வணிக வளாகங்களும், உணவகங்களும் வந்துள்ளன. அங்கு வரும் பொதுமக்கள், பிரமாண்ட துணிக்கடை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அங்கு நிழற்குடை வசதியில்லை. இதனால், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் வெயில் கொடுமையால் கடும் அவதியடைகின்றனர். எனவே, அங்கு இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடையை பல்லவபுரம் நகராட்சி அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
-வி.சந்தானம், குரோம்பேட்டை.