அடையாறு, இந்திரா நகரிலிருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் போன்ற வெளியூர்களுக்கு பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன. இந்தப் பேருந்து நிலையத்தின் அருகில் "நம்ம டாய்லெட்' கழிப்பிடம் உள்ளது. ஆனால், இந்தக் கழிப்பிடம் முறையாகப் பராமரிக்கப்படாததால் பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, அந்தக் கழிப்பிடத்தை முறையாகப் பராமரித்து, பொதுமக்கள் பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.