ஆராய்ச்சிமணி
சுகாதாரமற்ற உணவகங்கள் மீது நடவடிக்கை தேவை!
சென்னை-101, திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையின் நடைபாதையில் இயங்கும் உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது.
சென்னை-101, திருமங்கலம் காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையின் நடைபாதையில் இயங்கும் உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது.
இதை பள்ளி மாணவ - மாணவிகள், பெற்றோர் உள்பட ஏராளமானோர் சாப்பிட்டு பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், சமையல் பாத்திரங்களின் கழிவுநீரை சாலையிலேயே கொட்டுவதால், கொசுக்கள் அதிகரித்து டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து பெருநகராட்சி புகார் எண்ணுக்கு அழைத்து சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பகுதிக்கு சுகாதாரத் துறை உயரதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சுமிபாய், அண்ணாநகர் மேற்கு.