சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை சாலையின் இருபுறமும், வர்தா புயலின்போது முறிந்து விழுந்த மரங்கள் வெட்டப்பட்டு பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக, பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைùபெற்று வருவதால், அங்கு சாலையின் ஓரம் வெட்டப்பட்டு கிடக்கும் மரங்களால் அன்றாடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புயலில் வீழ்ந்த மரங்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
எஸ். கோபாலன், மறைமலை நகர்.