தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அபிபுல்லா நகரில் உள்ள சுதந்திர தினப் பூங்காவுக்கு சுற்றுச்சுவர் அமைத்து, பூங்காவை மேம்படுத்த ரூ20 லட்சம் நிதி ஒதுக்கி பல வருடங்களாகியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முடிச்சூர் அபிபுல்லா நகர் நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.