மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?

சென்னை, நொளம்பூர் ஸ்ரீராம்நகர் பிரதான சாலையில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் எரிவதில்லை.

சென்னை, நொளம்பூர் ஸ்ரீராம்நகர் பிரதான சாலையில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் எரிவதில்லை. இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இரவில் தெரு விளக்குகள் எரியாததால் வயதானவர்களும் குழந்தைகளும் பெண்களும் மிகவும் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது.
மேலும், சாலையில் கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து மேடு பள்ளங்கள் உருவாகியுள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, சென்னை பெருநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

எம்.பார்த்தசாரதி, நொளம்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com