திருவொற்றியூர் அம்சா தோட்டம் முதல் தெருவில் உள்ள தெருவிளக்குகள் மூன்று மாதமாக எரியவில்லை. எனவே இந்தத் தெரு இருள்சூழ்ந்து இருப்பதால் திருடர்கள் பயம் உள்ளது. சங்கிலிப் பறிப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. மேலும் மேற்கு குளக்கரை சாலைப் பகுதி பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்தப் பிரச்னைகளை சீர்செய்ய மாநகராட்சி அதிகாரிகள் முன்வரவேண்டும்.
பி.கே. ஈஸ்வரன், திருவொற்றியூர்.