சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருமால்பூர், தாம்பரம், செங்கல்பட்டு போன்ற இடங்களுக்கு அடிக்கடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கடற்கரை ரயில் நிலையத்துக்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த நிலையத்தில் பயணிகளின் தேவைக்கேற்ப கழிப்பிடங்கள் இல்லை. இதனால், நீண்ட தூரத்துக்கு மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே தேவையான அளவில் கழிப்பிடங்களை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதை மேற்கு.