பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் செயல்படத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் பல்லாவரம் தாலுகா மற்றும் அதன் கீழுள்ள ஊர்களின் பெயர்கள் தமிழக அரசின் இணையதளத்தில் இணைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இணையதளத்தில் பெயர்களைச் சேர்க்கவேண்டும்.
பி. ரமேஷ், கீழ்கட்டளை.