சென்னை மடிப்பாக்கம், கீழ்கட்டளை பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இவை, இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக் கொள்வதால், இதை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர் நிகழ்வாகி வருகிறது. ஆகவே, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைப்பதுடன், அதன் உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சித்ரா, கீழ்கட்டளை.