சென்னை அடையாறு, மகாத்மா சாலையில் சாஸ்திரி நகர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையை நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் இந்த நிழற்குடையை இடித்து விட்டு புதிய நிழற்குடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாஸ்திரி நகர் 2-ஆவது அவென்யூவில் சேதமடைந்த பெயர்ப் பலகையை சீரமைக்கவும், அப்பகுதியில் வேகத்தடை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜகுரு, திருவான்மியூர்.