ஆசியாவிலேயே பெரிய வணிக வளாகம் என்ற பெருமையுடன் அமைந்துள்ள கோயம்பேடு வணிக வளாகத்துக்கு என அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உண்டு. பல மாநிலங்களில் இருந்து காய், கனி உள்ளிட்ட பொருள்கள் வருகின்றன. தினமும் பல டன் குப்பைகள் குவிகின்றன. வணிகர்கள், தனியார் நிறுவனத்தினர், பொதுமக்கள் பலரும் வந்து போகின்றனர். நிர்வாகம் தன் பணி யைப் பிரித்து தூய்மைப் படுத்த வேண்டும். கடைகளை முறைப்படுத்தி போக்குவரத்தைச் சீர்படுத்த வேண்டும். மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ப.விருதகிரி, கோயம்பேடு.