சென்னை பாரிமுனை மற்றும் பூக்கடை பஸ் நிலையம் உயர் கோபுர மின் விளக்கு அருகில் உள்ள சாலையை மெட்ரோ ரயில் பணிக்காக முன்பு மூடியது இன்னும் திறக்க வில்லை. அதை திறந்து உயர்நீதிமன்றம், சட்டப்பேரவை அலுவலகம், எல்.ஐ.சி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல அலுவலகங்களுக்கு நடந்து செல்பவர்கள் மிகுந்த தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடந்து செல்பவர்களுக்கு வழிவிட வேண்டும்.
கே.ரபியா பிரவீண், சென்னை.