மீஞ்சூரை அடுத்த அரியன்வாயல் கிராமத்தில் உள்ள அமாவாசைக் குளத்தில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
இதனால், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, குளத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தட்சிணாமூர்த்தி, மணலி புதுநகர்.