மணலிபுதுநகரில் உள்ள பொதுநூலகத்தில் தரைகள், சுவர்கள் விரிசலடைந்து சிதிலமடைந்துவிட்டன. இதனால் வாசகர்களுக்கு பெரிதும் சிரமம் அடைந்துவருகின்றனர். மேலும், இங்கு அசோக் லேலண்ட் நிர்வாகத்தால் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடமும் இன்று வரை திறக்கபடவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுமா?
-எம்.தட்சிணாமூர்த்தி, மணலிபுதுநகர்.