பூந்தமல்லி- பட்டாபிராம் இடையே இயக்கப்படும் 54சி பேருந்துகள் பாரிவாக்கம், கோலப்பஞ்சேரி, சித்துக்காடு, வயலாநல்லூர், அமுதூர்மேடு, தண்டரை வழியாகச் செல்கின்றன. இந்த பகுதிகளைச் சேர்ந்தோர் பட்டாபிராம் இந்து கல்லூரி, சேக்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை. ஆகவே, 54சி பேருந்தை ஆவடி வரை நீட்டிக்க வேண்டும்.
-கே.உமாசங்கர், சுந்தர் நகர்.