சென்னை பெருநகர போக்குவரத்து திட்டம் மக்களின் பயன்பாட்டுக்காக சென்னை கடற்கரை- திருமயிலை வரை தொடங்கப்பட்டது. 2007-இல் இத்திட்டம் திருமயிலையிலிருந்து வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரையிலான அடுத்தக்கட்ட பணிகள் 2007-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட போதிலும் இன்றுவரை ஆமை வேகத்திலேயே செயல்பாடு உள்ளது. இத்திட்டத்துக்கு பின்னர் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் வேகமாக நடைபெற்றது. வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான 3 கி.மீ. தொலைவு ரயில்பாதைப் பணிகளை விரைந்து முடித்தால் சென்னையைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான புறநகர் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும். அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?
-கோபாலன், மறைமலைநகர்.