வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் 6-ஆவது பிரதான சாலை தாழ்வாக உள்ளது. இதனால், சிறு மழைக்கு கூட வீடுகளுக்குள் தண்ணீர் சென்றுவிடுகிறது. சாலையின் மேற்கு முனையில் அண்மையில் கட்டப்பட்ட சிறுபாலம் வழியாக தண்ணீர் வெளியேறுவதில்லை. ஆகவே, சாலையை ஜல்லி போட்டுஉயர்த்தி, மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-எஸ்.ஆர்.சுரேந்தர், வேளச்சேரி.