நாங்கள் வசிக்கும் மணலி புதுநகர் பகுதியில் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மின்சாரம் தடைப்படுகிறது. ஒருமுறை மின்சாரம் தடைப்பட்டால் மீண்டும் வருவதற்கு பல மணி நேரம் ஆகிறது. குறிப்பாக, நள்ளிரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் முதியவர்கள், நோயாளிகள், மாணவ மாணவியர் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, எங்கள் பகுதியில் தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்கு மின்சார வாரியம் ஆவன செய்ய வேண்டும்.
தங்க. சங்கரபாண்டியன், மணலி புதுநகர்.