மெட்ரோ ரயில் திட்டம் விம்கோ நகர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி முதல் விம்கோ நகர் வரையிலான சாலையில் பெரும் பகுதி அடைக்கப்பட்டு சாலைகள் சிற்றூர் சாலைகளைப் போல மாறிவிட்டன. இந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வங்கிகள் போன்றவற்றின் வாயில்களுக்கு எதிரே பெரும் தடுப்பு போல் அடைந்துவிட்டதால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்கின்றனர். இந்தப் போக்குவரத்து நெரிசல் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவியழகன், திருவொற்றியூர்.