சென்னை கிழக்கு தாம்பரம் அருகில் உள்ள மாடம்பாக்கம் பகுதியில் பழமையான ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தற்போது அந்தக் கோயிலில் பல லட்சம் செலவு செய்து திருத்தேரை உருவாக்கியுள்ளனர். ஆனால், இந்தத் தேரை நிறுத்துவதற்கு கூடாரம் அமைக்கப்படாததால் கோயிலுக்கு அருகிலேயே திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தேர் சீக்கிரமாகவே பழுதடையும் அபாயம் உள்ளது. எனவே, தேரை நிறுத்துவதற்கான கூடாரம் அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.கண்ணன், சென்னை - 88.