கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகள் ஈக்காட்டுதாங்கல் வழியாகச் செல்கின்றன. அந்தப் பேருந்துகளின் வழித்தடத்தை மாற்றி மேற்கு சைதாப்பேட்டை வழியே இயக்க ஆவன செய்ய வேண்டும் அல்லது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சைதாப்பேட்டை வழியாக புறநகர் பேருந்துகள் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்துத் துறை அமைச்சரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ நடவடிக்கை எடுப்பார்களா?
எல்.பக்தவத்சலம், மேற்கு சைதை.