நாங்கள் வசிக்கும் அம்பத்தூர் லெனின் நகர் மணல் ஓடை தெருவில் ஆவடி நகராட்சி மூலம் கழிவுநீர் கால்வாய் எடுக்கப்பட்டு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மேல் அம்பத்தூர் நகராட்சி என்பதால் செயின்ட் ஜான்ஸ் பள்ளி முன் உள்ள தனியார் நிலத்தில் விட்டுவிட்டனர். நிலத்திலுள்ள அந்தக் கால்வாயை அடைத்து சாலையில் விட்டனர். இதனால் அந்தச் சாலையில் முழங்கால் அளவுக்கு கழிவுநீர் ஓடுகிறது. இதனால், அவ்வழியாகச் செல்லும் பள்ளிக் குழந்தைகள் சாலையில் விழுந்துவிடுவதோடு, வாகனங்கள் செல்லும்போது கழிவுநீர் அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றுவிடுகின்றன. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதியை நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கே. கருணாகரன், அம்பத்தூர்.