நிலத்தடி நீர் பாழ்!

குரோம்பேட்டை நேரு நகர் பகுதியில் ஒரு சில வீடுகளின் நிலத்தடி நீரில் கடந்த ஆண்டு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து பெட்ரோல் கசிந்து, நிலத்தடி நீர் பாழாகிவிட்டது.

குரோம்பேட்டை நேரு நகர் பகுதியில் ஒரு சில வீடுகளின் நிலத்தடி நீரில் கடந்த ஆண்டு அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து பெட்ரோல் கசிந்து, நிலத்தடி நீர் பாழாகிவிட்டது. இதுதொடர்பாக பலமுறை பொதுமக்கள் புகார்கள் அளித்தும், பல்லவபுரம் நகராட்சியோ, மாசுக் கட்டுப்பாட்டு வாரியமோ அல்லது இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனமோ இதுவரை நிலத்தடி நீரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பழைய நிலைக்குக் கொண்டுவர எவ்வித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதற்கு பெட்ரோலிய நிறுவனம் பொறுப்பேற்று நிலத்தடி நீரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.சந்தானம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com